உக்ரைனுக்குப் புதிய ஆபத்து! ரஷ்யாவிற்குப் படையெடுக்கும் வடகொரிய இராணுவ வீரர்கள்
ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வடிம் ஸ்கிபிட்ஸ்கி (Vadym Skibitskyi) இதனை தெரிவித்துள்ளார். இந்த புதிய படையில் உக்ரைன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட 400 ட்ரோன் இயக்குநர்கள் (Drone Operators) சேர்க்கப்பட்டிருப்பது உக்ரைனுக்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் போர்த் தாக்குதல்களுக்குத் துணையாக வடகொரியாவிலிருந்து 8,500 ராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவை வந்தடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உக்ரைன் உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வடிம் ஸ்கிபிட்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்படைப்பிரிவில் உக்ரைனின் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் திறன் கொண்ட 400 ட்ரோன் இயக்குநர்களும் இடம்பெற்றுள்ளனர். இது உக்ரைனுக்குப் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.