யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்
ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டினார். யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இடம்பெறும் போராட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். <...

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் இலங்கை இராணுவத்தால் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் பூர்வீகத் தமிழ் நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பொதுமக்களின் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இவ்விடயம் குறித்துக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்து வருவதை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.