ஆதவ் பேசினாலே சண்டை தான்.. அவர பேச விடாதீங்க.. பிரேமலதா ஆவேசம்..
சட்டப்பேரவையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, கடந்த 2015 முதல் 2021 வரை தான் திமுகவில் பணியாற்றியதாக தெரிவித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு, கட்சிக்காக பணியாற்ற வந்ததாகவும் அவர் கூறினார். தனது பணியின் தன்மை குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியும் என்றும், தான் இருந்த எந்த இடத்திலும் யாருக்கும் துரோகம் செய்ததில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசத் தொடங்கினால் அது திமுகவுக்கு நல்லதாக இருக்காது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். “வார்த்தைகளை விட வேண்டாம்; அமைதியாக இருங்கள்” என ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகக் கூறினார். இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், கடந்த ஒரு வாரம் முதல் 10 நாட்களாக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை பொறுமையாக கவனித்து வருவதாக தெரிவித்தார். மானியக் கோரிக்கைகள் தவிர மற்ற அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று வருவதாகவும், ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அல்லாமல், ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையில் பேசுவதாகவும் அவர் கூறினார். மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவே சட்டப்பேரவை செயல்பட வேண்டும் என்றும், உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார். “வாக்குவாதம் ஓரளவுக்கு இருந்தால் ரசிக்கலாம். ஆனால், தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் என்ன பலன்? தொகுதி பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு இரவு பகலாக தேர்வுக்கு தயாராகுவது போல் தயாராகி வருகிறோம். ஆனால், கடைசி வரை மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச முடியாத நிலை உள்ளது” என அவர் வேதனை தெரிவித்தார். கடந்த சில நாட்களாக சட்டப்பேரவை நிகழ்வுகளில் சண்டை மற்றும் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளதாகவும், மாலை 6.30 மணி வரை இதே நிலை நீடித்தால் மக்கள் அதை எவ்வாறு பார்ப்பார்கள் என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார். மேலும், “பேசியவர்கள் தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்; அவர்கள் தான் சண்டையும் போடுகிறார்கள். இது சட்டமன்றம், சண்டை மன்றம் கிடையாது” என அவர் ஆவேசமாகக் கூறினார். ஆதவ் அர்ஜுனா பேசாதவரை அவை அமைதியாக இருப்பதாகவும், அவர் பேச அனுமதிக்கப்படும்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் கூறிய பிரேமலதா, “அவர் பேச அனுமதித்தால் சண்டையாக மாறிவிடுகிறது; அவரை பேச விடாதீர்கள்” எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 2014 மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு, 2015 முதல் 2021 வரை தாம் அக்கட்சிக்காக பணியாற்றியதாகத் தெரிவித்தார். தனது செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்கு தெரியும் என்றும், தாaன் பணியாற்றிய காலத்தில் யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பேசினால் அது திமுகவுக்கு சாதகமாக இருக்காது என ஆதவ் அர்ஜுனா எச்சரித்தார். அவர் பேசினாலே சண்டையாகத்தான் முடிகிறது, எனவே அவரை பேச அனுமதிக்காதீர்கள் என்று பிரேமலதா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.