“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்”.. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானம்!!
Tamil Thai Vaazhthu Resolution: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலக நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் நாளை கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலக நிகழ்வுகளின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் விஜய் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
மாநிலத்தின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.