தாஜ்மகாலில் தேசிய கொடி ஏற்ற ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? காரணம் உங்களை ஆச்சரியபடுத்தும்!
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் அன்பின் சின்னமாகவும் அறியப்படும் தாஜ்மஹாலில் ஆச்சரியப்படும் சம்பவம் நடந்துள்ளது. நேற்று(ஆகஸ்ட் 15 அன்று), ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் மூவர்ணக் கொடியை ஏற்ற முயன்ற ஒருவர், பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்ளலாம்.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹால் வளாகத்திற்குள், சுதந்திர தினமான நேற்று மூவர்ணக் கொடியை ஏற்ற முயன்ற நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். தாஜ்மஹால் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ள இந்தச் சின்னத்தில், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அந்த விதிகளின்படியே கொடியேற்ற முயன்ற நபர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.