OMPயின் ஏமாற்று நாடகம்! யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : காவல்துறையினர் அராஜகம்
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (25) குறித்த போராட்டம் நடைபெற்றது. காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (omp) ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதே...

காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) ஏமாற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் ஒன்று இன்று (25) முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காணாமல் போனோர் அலுவலகத்தினால் மாவட்ட செயலகத்தில் நடத்தப்படவிருந்த கலந்துரையாடலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதன்போது காவல்துறையினரின் அராஜகச் செயல்கள் இடம்பெற்றதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.