இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வருகை தந்தார் : உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் சூளுரை
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங்,(Wei Huaxiang) தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) இலங்கைக்கு வருகை தந்தார். நாட்டிற்கு வந்தடைந்த பின்னர் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தப் பாடுபடுவேன் என்று குறிப்பிட்டார். இலங்கையின் வளமான வரலாறு, இயற்கை அழகு மற்றும் அதன் மக்களின் விருந்தோம்பல் ஆகியவற்றின் மீதான தனது பாராட்டுகளை வெளிப்படுத்திய தூதர் வெய் ஹுவாக்சியாங், சீனாவுக்கும் ...

இலங்கைக்கான புதிய சீனத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாக்சியாங், தனது பணிகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வருகை தந்த பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வளமான வரலாறு, இயற்கை அழகு மற்றும் மக்களின் விருந்தோம்பல் பண்புகளை அவர் பெரிதும் பாராட்டியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தான் பாடுபடப்போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.