''தமிழ்தாய் வாழ்த்து தீர்மானம் ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்''; திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி..!
முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டுவந்துள்ள தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்று தனித்தீர்மானம் ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான் என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, திமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சராக இருந்த கோவி.செழியன் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது என்று கூறினார். அதன் பின்னர் எல்லா நிகழ்ச்சிகளிலும் பின்பற்றப்பட்டன என்றும், தற்போது முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான் என்று தெரிவித்தார். இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றதால் நிலைத்து நிற்க முடியும் என்றும், மத்திய அரசு என்று சொல்லவே பயப்படும் இந்த அரசு சட்ட மசோதா கொண்டு வருமா? என்பது சந்தேகமாக உள்ளது என்று விமர்சித்தார். அத்துடன், தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து என்றும், எனவே, அதற்கு சட்ட வடிவம் தேவை என்றும், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இல்லையென்றால் தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறதாகவும், அப்படி இல்லை என்றால் அன்றைய தினத்தில், எங்களது உறுப்பினர்கள் இதுகுறித்து பேசுவார்கள் என்று செய்தியாளர்களிடம் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கும் தனித்தீர்மானம், ஆளுநரையோ அல்லது பிறரையோ கட்டுப்படுத்துமா என்பதில் சந்தேகம் இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கோவி.செழியன், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது கட்டாயம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியதை அவர் நினைவு கூர்ந்தார். அந்தத் தீர்மானத்திற்குப் பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் அது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்ததாக ரகுபதி குறிப்பிட்டார்.