அரசு பெண் ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. 3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு..
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும்போது 12 வாரங்கள், அதாவது 3 மாதங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. பிரசவத்துக்குப் பிறகு உடல்நலத்தை மீட்டெடுப்பதற்கும், பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கும் 3 மாத கால விடுப்பு போதுமானதாக இல்லை எனக் கூறி, விதிமுறையை மாற்ற வேண்டும் என்று பெண் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரசு பெண் ஊழியர்கள் தங்கள் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, தற்போது ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்றாவது குழந்தைக்கு 3 மாதங்கள் அல்லது 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்தக் குறுகிய கால அவகாசம் குழந்தையைப் பராமரிக்கவும், தாயின் உடல்நலத்தை மீட்டெடுக்கவும் போதுமானதாக இல்லை எனப் பெண் ஊழியர்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.