PulseNews
அரசியல்

நாஞ்சில் சம்பத் பேச்சுக்கு தடை போட்ட ரங்கராஜ் பாண்டே; மீடியா விவாதத்தில் நடந்தது என்ன? தி.மு.க விளக்கம்

தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், "த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் அராஜகப் பேச்சுக்கு கடும் கண்டனம். இன்று சென்னை மதுரவாயலில் பிகைண்ட்வுட்ஸ் (@behindwoods) சேனல் சர்பாக நடைபெற்ற விவாத அரங்கில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த கோவை சத்தியன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி இடும்பவம் கார்திக் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். தொடர்ந்து த.வெ.க-வைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் பழ.செல்வக்குமார் பேசினார். அதன்பிறகு த.வெ.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேச எழுந்தார். நிகழ்வு ஆரம்பிக்கும் போது மக்கள் அரங்குகளில் மாற்றுக் கருத்து தெரிவிப்பதும், கேள்வி எழுப்புவதும், முழக்கம் எழுப்புவதும் ஜனநாயகத்தில் இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் இன்றும் கூடியிருந்த மக்கள் தங்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். ஆனால், பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் நாஞ்சில் சம்பத் அவர்கள் ஆளுங்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற ஆணவத்தில் தன்னிலை மறந்து, பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையிலும், பொது அரங்கில் பயன்படுத்தக்கூடாத கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஆவேசமாக கத்த தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முழக்கம் எழுப்பினர். உடனடியாக நானும், தம்பி இடும்பவம் கார்த்திக் அவர்களும், கோவை சத்தியன் அவர்களும் நிகழ்ச்சியின் நடுவர் ரங்கராஜ் பாண்டே அவர்களிடம் நாஞ்சில் சம்பத் அவர்கள் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மட்டுமல்லாமல், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எங்களது கண்டனத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நடுவர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் நாஞ்சில் சம்பத் அவர்களை தொடர்ந்து பேச அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்ததன் காரணமாக நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. ஆளுங்கட்சியாக இருக்கிறோம் என்ற ஆணவத்தில் தவெக நிர்வாகிகள் பொது மேடைகளில் அடாவடியாக நடந்து கொள்வதும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் இயல்பாகிவிடக் கூடாது. அதிகார ஆணவத்தில் அராஜகம் செய்த பல கட்சிகளும், ஆட்சிகளும் வரலாற்றில் வீழ்ந்திருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சு அராஜகத்தின் உச்சம்; ஆணவத்தின் உச்சம். பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேடையிலேயே எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன். நிகழ்ச்சி நிர்வாகமும் அதனை ஏற்று அவரை தொடர்ந்து பேச அனுமதிக்காமல் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ஜனநாயக மேடைகளில் கருத்து மோதல்கள் இருக்கலாம்; ஆனால் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் இழந்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாஞ்சில் சம்பத்தின் இன்றைய பேச்சை வன்மையாகக் கண்டிக்கதக்கது." என்று அவர் கூறியுள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நாஞ்சில் சம்பத் பேச்சுக்கு தடை போட்ட ரங்கராஜ் பாண்டே; மீடியா விவாதத்தில் நடந்தது என்ன? தி.மு.க விளக்கம்
PulseNews சுருக்கம்

சென்னை மதுரவாயலில் பிகைண்ட்வுட்ஸ் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில், நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு ரங்கராஜ் பாண்டே தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்தியன், நாம் தமிழர் கட்சியின் இடும்பவனம் கார்த்திக் மற்றும் தவெகவின் பழ.செல்வக்குமார் ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

நாஞ்சில் சம்பத்தின் அராஜகப் பேச்சை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவாத அரங்கில் நடந்த சம்பவங்கள் குறித்த விளக்கத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics