PulseNews
அரசியல்

5 தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படம்; திருமாவளவனுக்கு வந்த பரிசு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கூட்டணியின் விசிக இடம்பெறுவதாகவும் தவெகவுடன் அரசியல் களத்தில் விசிக தொடர்ந்து பயணிக்கும் என திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (30-08-26) தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட விசிக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியின் போது தொல். திருமாவளவனுக்கு ஓவியர் சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தி என்பவர் 5 தலைவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட திருமாவளவனின் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். அதாவது புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ், மேதகு பிரபாகரன், சமூக போராளி தமிழரசன் ஆகியோரின் 1,15,000 புகைப்படங்களைக் கொண்டு திருமாவளவனின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வாங்கிய திருமாவளவன் மெய் சிலிர்த்து போனார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
5 தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படம்; திருமாவளவனுக்கு வந்த பரிசு!
PulseNews சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழக வெற்றிக் கழகத்துடன் அரசியல் களத்தில் தொடர்ந்து பயணிப்போம் என்றும், அக்கட்சியின் கூட்டணியில் விசிக இடம்பெறும் என்றும் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த மாநாட்டைத் தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில், 5 தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற புகைப்படம் ஒன்று திருமாவளவனுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics