PulseNews
அரசியல்

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல கடும் தடை: அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடு

தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் கைபேசி எடுத்துச் செல்வதற்கானத் தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், சில இடங்களில் இதற்கான விதமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. கோவிலின் வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுத்தல், காணொளிகள் பதிவு செய்தல், செஃல்பி எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களுக்காக ரீல்ஸ் தயாரிப்பது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் திருக்கோவில்களின் புனிதத் தன்மையும் ஆன்மீகச் சூழலும் பாதிக்கப்படுவதோடு, இறைவனைத் தொழ வரும் பக்தர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, கோவில்களுக்குள் பக்தர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதைத் தடை செய்யும் நடவடிக்கைத் திட்டங்களை தீவிரப்படுத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை ஆணையர் முனைவர் டி.ஜி. வினய் விரிவான வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். அதன்படி, வருகிற 1-ஆம் தேதி முதல் அனைத்து முதன்மை திருக்கோவில்களிலும் பக்தர்கள் கைபேசியைக் கொண்டு செல்வதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட வேண்டும். பக்தர்களின் பயன்பாட்டிற்காகக் கோவில் நுழைவுவாயில் அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகில் கைபேசிகளைப் பாதுகாப்பாக வைக்கும் வைப்பக வசதிகளை உடனடியாக ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கைபேசியைப் பாதுகாப்பாகப் பெற்று ஒப்படைப்பதற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அதற்குரிய அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்பட வேண்டும். இப்பணியை மேற்கொள்ளத் தேவையான பணியாளர்களும் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட வேண்டும். கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள தகவலைப் பக்தர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், நுழைவுப் பகுதியிலும் வெளிப்பகுதியிலும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்; ஒலிபெருக்கிகள் மூலமாகவும் இது தொடர்ந்து அறிவிக்கப்பட வேண்டும். மேலும், இறைவனின் திருவுருவங்கள், கோவில் வளாகம் ஆகியவற்றைப் புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் பதிவு செய்வது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி-க்கள், முக்கிய நபர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்களுக்கும் இத்தடைகள் பொருந்தும்; அவர்களுக்கும் ஒளிப்படம் எடுக்க அனுமதி கிடையாது. விதிகளை மீறி அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், கண்காணிப்பைப் பலப்படுத்தவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல கடும் தடை: அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடு
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் கைபேசி பயன்படுத்துவதால் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதையும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதையும் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் 1-ஆம் தேதி முதல் அனைத்து முதன்மை திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு கைபேசி எடுத்துச் செல்ல முற்றிலுமான தடை அமலுக்கு வருகிறது.

கோயில் நுழைவுவாயில்களில் கைபேசிகளைப் பாதுகாப்பாக வைக்க வைப்பகங்களை ஏற்படுத்தவும், ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலித்து ரசீது வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விஐபிக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உட்பட அனைவருக்கும் இந்தத் தடை பொருந்தும் என்பதால், விதிகளை மீறுவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், கோயில் வளாகத்தில் விழிப்புணர்வு பலகைகளை வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics