அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதியரசர்களும் அடங்கிய முழுமையான அமர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். <...

அரசாங்கம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீதித்துறையைத் தனது பிடிக்குள் கொண்டுவர முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது, உயர் நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களும் அடங்கிய முழுமையான அமர்வொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.