சிஐடி விசாரணை போதாது.. சிபிஐதான் வேணும்.. ஜார்க்கண்ட் மாணவர்கள் திட்டவட்டம்! ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி
One India15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் பலனாக, ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் மற்றும் டிடிபிஎல் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஹேமந்த் சோரன் அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை மாணவர்கள் வரவேற்றாலும், தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.
இந்த முறைகேடு தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று மாணவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹேமந்த் சோரன் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
#politics