Caste Based Census: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம்
Caste Based Census: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அது சமூகநீதிக்கு வலிமை சேர்க்கும் வகையில் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை ஆகும் - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இது தொடர்பாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். சமூகநீதியை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கணக்கெடுப்பைச் சரியாக நடத்த மத்திய அரசுக்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூகநீதிக்கு வலுசேர்க்கும் விதமாக சாதிகளைப் பதிவு செய்யும் இந்தப் பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வது நம் அனைவரின் கடமையாகும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.