ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் “தவெக உடன்படவில்லை என்றால் கூட்டணியை விட்டே விலகுவோம்” – காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி
2029 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திதான் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் என்றும், தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் விலகுவார்கள் என்றும் அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை 2029 பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தவெக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், காங்கிரஸ் தரப்பின் இந்த வெளிப்படையான நிலைப்பாடு கூட்டணிக்குள் புதிய அரசியல் மோதலுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் இதனை ஏற்க மறுத்தால், காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள் என்று அவர் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக தரப்பினர் முன்னிறுத்தி வரும் சூழலில், காங்கிரஸ் அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு கூட்டணிக்குள் புதிய மோதலை உருவாக்குமா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.