ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு!
சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பெருமளவிலான முறைகேடு ஒன்றை மறைப்பதற்குத் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய கொள்கலன் (Container) ஒன்று தொடர்பிலேயே இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண...

சுங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற பாரிய முறைகேடு ஒன்றை மறைக்க ஜனாதிபதியின் செயலாளர் முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார். ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றிலேயே இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.