இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் - யாழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில்...

இந்தியாவில் அகதிகளாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைது நடவடிக்கைகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான அவர் இதனை அறிவித்தார். கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடல் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.