PulseNews
அரசியல்

விசிகவின் மாநாட்டில் அடங்க மறுத்த சிறுத்தைகள்! இரண்டு கெட்ட பெயர் வாங்கிய தவெக அரசு! வேலையை காட்டிய விசிக!தர்ம சங்கடத்தில் விஜய்!

விசிக மாநாடு தொடர்பாக அடுத்தடுத்து எழுந்த இரண்டு சர்ச்சைகள், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அரசியல் ரீதியாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கூட்டணி கட்சியான விசிகவை மையமாகக் கொண்டு உருவான இந்த இரண்டு விவகாரங்களும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முதலாவது சர்ச்சை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டை ஒட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவகாரம். மாநாட்டையொட்டி ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டிற்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது சரியான நடைமுறையா என்ற கேள்வி பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்றால், அரசியல் கட்சியின் மாநாட்டை விடுமுறை நாளில் நடத்த அனுமதித்திருக்க வேண்டும் என்றும், மாநாட்டிற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது தவறான முன்னுதாரணம் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது விவகாரம் தஞ்சாவூரில் நடைபெற்ற விசிகவின் சாலை மறியல் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல். தஞ்சை ரயில் நிலையம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விசிக விளம்பர பேனரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை கண்டித்து விசிகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வேலைக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் என்ற இளைஞர், வழிவிடுமாறு போராட்டக்காரர்களிடம் கூறியதாகவும், இதனால் அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் இளைஞரை சமாதானப்படுத்த முயன்றபோது, அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ. அப்துல் ரஹீம் இளைஞரை நோக்கி கையை ஓங்கியதாகவும், தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சாலை மறியல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசிகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதேநேரத்தில் போராட்டத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய இளைஞர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், விசிக மாநாட்டை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த விவகாரமும், தஞ்சை சாலை மறியலின்போது ஏற்பட்ட போலீஸ்–இளைஞர் மோதலும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு தேவையற்ற அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விசிக தற்போது விஜய் தலைமையிலான அரசின் கூட்டணி கட்சியாக இருக்கும் நிலையில், கூட்டணி கட்சியைச் சுற்றி எழும் இதுபோன்ற சர்ச்சைகள் நேரடியாக அரசின் நிர்வாக செயல்பாடுகள் மீதும் விமர்சனங்களை உருவாக்குகின்றன. இந்த இரண்டு விவகாரங்களிலும் அரசு எவ்வாறு விளக்கம் அளிக்கிறது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுக்கிறது என்பதே அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விசிகவின் மாநாட்டில் அடங்க மறுத்த சிறுத்தைகள்! இரண்டு கெட்ட பெயர் வாங்கிய தவெக அரசு! வேலையை காட்டிய விசிக!தர்ம சங்கடத்தில் விஜய்!
PulseNews சுருக்கம்

விசிக மாநாட்டை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட விவகாரம் மற்றும் மாநாட்டைச் சுற்றியுள்ள பிற சர்ச்சைகள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அரசியல் ரீதியாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. கூட்டணி கட்சியான விசிகவின் இந்த நிகழ்வுகளால் அரசுக்கு தேவையற்ற அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மாநாடு தொடர்பான தொடர் சர்ச்சைகள் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இந்த விவகாரங்கள் தவெக தலைமைக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் களத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics