நாளை விடுமுறை... இன்றே டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மதுப்பிரியர்கள்
திருச்சி டாஸ்மாக் கூட்ட நெரிசல்: சுதந்திர தின விடுமுறையால் நாளை மதுகடைகள் மூடப்படுவதற்கு முன், திருவெறும்பூர் டாஸ்மாக் கடையில் இன்று மதுப்பிரியர்கள் பெருமளவில் குவிந்து பரபரப்பு மற்றும் நெரிசல் நிலை ஏற்பட்டது. Trichy TASMAC rush: Ahead of Independence Day closure, heavy crowd of liquor buyers throngs Thiruverumbur outlet today, causing congestion and tense scenes in the area.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக திருவெறும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் இன்று அதிகளவில் திரண்டனர்.
இந்தக் கூட்ட நெரிசலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மது வாங்க வந்தவர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால், அந்த இடத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.