“சொந்த ஊரு வேறயா இருக்கலாம்.. ஆனா உசுரு சென்னைதான்!”.. 387வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வந்தாரை வாழவைக்கும் சென்னை!!
Chennai City Celebrates Its 387th Birthday: தமிழ்நாட்டின் தலைநகரமும் வந்தாரை வாழவைக்கும் தாயுமான சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. 386 ஆண்டுகளுக்கு முன் வெறும் 6,000 மக்கள் தொகையுடன் தொடங்கி, இன்று 1.25 கோடி மக்களுடன் உலகின் 26-வது பெரிய நகரமாக உருவெடுத்துள்ள சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொகுப்பு.

தமிழகத்தின் தலைநகரமும், தன்னை நாடி வருபவர்களை அரவணைத்து வாழவைக்கும் பெருமைக்குரிய சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. 386 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 6,000 மக்களுடன் தொடங்கப்பட்ட இந்த நகரம், இன்று 1.25 கோடி மக்கள் வசிக்கும் உலகின் 26-வது பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ள சென்னை, இன்றும் பலரது வாழ்வாதாரமாகவும் புகலிடமாகவும் திகழ்கிறது. சொந்த ஊர் எதுவாக இருந்தாலும், சென்னை மாநகரம் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.