மரபுக் கண்காட்சி, தொல்லியல் பயணம் நூல் வெளியீட்டு விழா!
சிவகங்கை தமிழவையம் சிவகங்கை தொல்நடைக் குழு இணைந்து நடத்திய மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் நூல் வெளியீட்டு விழா சிவகங்கை டி.கே.ஏ மகாலில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார். சிவகங்கை தமிழவையத் தலைவர் தமிழ்ச் செம்மல், சொ.பகிரத நாச்சியப்பன் தலைமையேற்று சிறப்பு செய்தார். சிவகங்கை தொல்நடைக் குழு செயற்குழு உறுப்பினர் திருமதி வித்யா கணபதி முன்னிலை வகித்துச் சிறப்பித்தார். தொல்லியல் பயணம் என்ற நூலை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சிவபிரகாஷ் வெளியிட, சிவகங்கை தொல்நடைக்குழுத் தலைவர் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சுந்தரராஜன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். தொல்லியல் பயணம் எனும் இந்நூல் பற்றி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா மதிப்புரை வழங்கினார். நூலாசிரியர் நல.ஞானபண்டிதன் ஏற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு சிவகங்கை தமிழ்ச்சங்கத் தலைவர் ஓவியர் முத்துகிருஷ்ணன், திருப்பத்தூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், மூத்த வழக்கறிஞர் இராம்பிரபாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வினை சிவகங்கை தமிழவைய பொருளாளர் ஜெயப்பிரியா தொகுத்து வழங்கினார். நிறைவாக சிவகங்கை தமிழவையச் செயலர் கா.சுரேஷ் நன்றியுரைத்தார். இந்நிகழ்வில் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், மேனாள் அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரி சாமி,அரிமா சங்கத்தை சேர்ந்த ரமேஷ் கண்ணா, பாண்டி, முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை டி.கே.ஏ மகாலில், சிவகங்கை தமிழவையம் மற்றும் சிவகங்கை தொல்நடைக்குழு இணைந்து நடத்திய மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிவகங்கை தமிழவையத் தலைவர் தமிழ்ச் செம்மல் சொ.பகிரத நாச்சியப்பன் தலைமை தாங்கினார்.
தொல்நடைக்குழு செயலர் நரசிம்மன் வரவேற்புரை வழங்க, செயற்குழு உறுப்பினர் வித்யா கணபதி முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சிவ முன்னிலையில் 'தொல்லியல் பயணம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.