தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வானது வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையும் ஆற்றப்பட்டிருந்தது. இறுதித் தமிழ் குறுநில மன்ன...

வன்னியின் இறுதித் தமிழ் குறுநில மன்னரும், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தேசிய மாவீரருமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த நிகழ்வு வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாறு மற்றும் தியாகம் குறித்த நினைவு பேருரையும் ஆற்றப்பட்டது.