வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் தீர்த்தோற்சவம் இன்று!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்றாகும். முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள தொண்டைமானாறு கடலேரி முகத்துவாரப் பகுதியில் முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும். அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்...

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத் திருவிழா இன்று (27) நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று காலை முதல் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பூசைகளைத் தொடர்ந்து, ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டைமானாறு கடலேரி முகத்துவாரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.