வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும். அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான தேரிலே எழுந்தருளுவார். அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்ச...

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று (27) சிறப்பாக நடைபெறுகிறது. அன்னதானக் கந்தன் எனப் போற்றப்படும் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் விசேட பூசைகள் நடைபெற்று வருகின்றன.
பூசைகளைத் தொடர்ந்து முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.