Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Free House : வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்தமாக பாதுகாப்பான வீடு வழங்க தமிழக அரசு ‘அகம்’ திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2,500 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. யாருக்கு கிடைக்கும், திட்டத்தின் முழு விவரம் என்ன?

வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான சொந்த வீடுகளை வழங்கும் நோக்கில், 'அகம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் தகுதியான பயனாளிகளுக்கு 2,500 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் யார் மற்றும் இதற்கான முழுமையான நடைமுறைகள் என்ன என்பது குறித்த விரிவான தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள வீடற்ற தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.