மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் 'மஞ்சணத்தி' படப்பிடிப்பு தொடங்கியது
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மஞ்சணத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மஞ்சணத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
மாரி செல்வராஜ் மற்றும் இளையராஜா இணைந்து பணியாற்றும் இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வாழ்வியலோடு நெருக்கமான கதைகளை உணர்வுப்பூர்வமாகப் படமாக்குவதில் பெயர் பெற்ற மாரி செல்வராஜின் படைப்பில், இளையராஜாவின் இசை இணையவிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.
தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படக்குழுவினர் படத்தின் அடுத்தகட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.