லார் கிப்பான் குரங்கு விவகாரத்தில் அதன் உரிமையாளரிடம் விசாரணை.
நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்டு சர்ச்சையான நிலையில், அந்த குரங்கின் உரிமையாளரான பெருந்துறையை சேர்ந்த கேசவ நாதனிடம் சுமார் ஒரு மணி நேரம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஈரோடு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆன அவர் மீது வனத்துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விக்ரம் லார் கிப்பான் வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்குரங்கின் உரிமையாளரான பெருந்துறையைச் சேர்ந்த கேசவ நாதனிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக கேசவ நாதன் மீது வனத்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக வனவிலங்கை வைத்திருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.