மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக நடிகை வைஷாலியின் புகாரும் மின்வாரியத்தின் விளக்கமும்..
மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோவுக்குப் பதிலளித்துள்ள மின்வாரியம் அவர் தனது மின் இணைப்பு விவரங்களைத் தெரிவித்தால் உரிய ஆய்வு செய்வதாகத் தெரிவித்துள்ளது. அதிக கட்டண புகார் தொடர்பாக மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரம் இணைப்புகள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 0.75% மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மின் நுகர்வோரும் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மின்னகம் பிரிவின் 9498794987 என்ற எண்ணிலோ அல்லது X வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்திருப்பதாக நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. இதற்குப் பதிலளித்துள்ள மின்சார வாரியம், நடிகை தனது மின் இணைப்பு விவரங்களை வழங்கினால், அது குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வு தொடர்பான புகார்களைக் கையாளுவது குறித்து விளக்கமளித்துள்ள வாரியம், இதுவரை மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரம் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 0.75 சதவீத இணைப்புகளில் மட்டுமே குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9498794987 என்ற எண்ணில் மின்னகம் பிரிவைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.