ஜி.டி.என். திரைப்படத்தை பார்த்த சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள்..
சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஜி.டி.என். என்ற ஜிடி நாயுடு வாழ்க்கை வரவாற்று திரைப்படம் ஊக்கமளிக்கும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் திரையிடப்பட்ட இந்த படத்தை அமைச்சர்கள் சரத்குமார், லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் பார்த்த ஜேசிடி பிரபாகர், பின்னர் பேசுகையில் பள்ளி மாணவர்கள் இத்திரைப்படத்தைப் பார்ப்பது குறித்துப் பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் என்று கூறினார்.

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட ஜி.டி.என். திரைப்படத்தை, சென்னை அடையாறில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் சரத்குமார், லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டுகளித்தனர். சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இத்திரைப்படம் சிறந்த ஊக்கமாக அமையும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.