சபரிமலையில் மோகன்லால் சினிமா படப்பிடிப்பு; கடும் நிபந்தனைகளுடன் தேவஸ்வம் போர்டு அனுமதி!
சினிமாவின் முழு ஸ்கிரிப்டையும் தேவஸ்வம் போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெறக் கூடாது போன்ற அறிவுறுத்தல்களுடன் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலையில் நடிகர் மோகன்லால் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்குத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், படப்பிடிப்பிற்காகச் சில கடுமையான நிபந்தனைகளை நிர்வாகம் விதித்துள்ளது.
படத்தின் முழு திரைக்கதையையும் தேவஸ்வம் போர்டிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐயப்ப சுவாமி கோயில் வழிபாடுகள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் அல்லது கேலி செய்யும் வகையிலான காட்சிகள் படத்தில் இடம் பெறக்கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.