PulseNews
சினிமா

என்னை பாதித்த பெரிய விஷயம், தனிப்பட்ட உலகத்தை பாதுகாப்பது அவசியம்: பொதுவெளியில் மனம் திறந்த துருவ் விக்ரம்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்திய பேட்டியில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; குறிப்பிட்ட எந்த உறவைப் பற்றியும் நேரடியாகப் பேசவில்லை. இருப்பினும், இரண்டு ஆண்டுகளாக நாசீசிஸ்டிக் (தன்னை மட்டுமே முன்னிறுத்தும்) துன்புறுத்தலை எதிர்கொண்டதாக தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பேட்டியில் குறிப்பிடப்பட்ட முன்னாள் காதலருடன் துருவ் விக்ரம் தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வருகிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இதனிடையே தற்போது நடிகர் துருவ் விக்ரம், கடந்த சில வாரங்களாகத் தான் எதிர்கொண்டு வரும் தீவிரமான பொதுவெளி விமர்சனங்கள் மற்றும் கண்காணிப்புகள் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார். இந்தியா டுடே தமிழ் ரவுண்ட்டேபிள் நிகழ்ச்சியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியாகும் கவனத்தை எவ்வாறு கையாள்கிறார் என்பது பற்றி பேசிய துருவ் விக்ரம், கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள பொதுமக்களின் கவனத்தை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் “நான் நேர்மையாகச் சொன்னால், அது என்னை ஒருபோதும் பாதித்ததில்லை என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில், உங்களை யதார்த்தத்துடன் இணைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். நீங்கள் யார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; எதற்காக நீங்கள் உறுதியாக நிற்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நேசிக்கும் அனைவரையும், உங்களுக்கு முக்கியமான அனைத்தையும் அல்லது இதற்கு முன்பு முக்கியமாக இருந்த அனைத்தையும் மிகவும் உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்தக் கவனத்தை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதையும் விளக்கிய துருவ் விக்ரம், “நீங்கள் உண்மையுடன் இணைந்திருக்கும்போது, உங்களை நிலைநிறுத்துவது எது என்பதை அறிந்திருக்கும்போது, மற்றவர்களின் கண்காணிப்பும் விமர்சனமும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் செல்ல முடியும். ஆழ்மனதில், நீங்கள் தனியாக ஒரு படையாக இருக்கக் கற்றுக்கொள்கிறீர்கள். உங்களுக்கென்று ஒரு உலகம் இருக்கிறது; உங்களுக்குள் இருக்கும் விஷயங்களைச் சரிசெய்யும் பணியைச் செய்கிறீர்கள். முடிந்தவரை உங்களுடைய தனிப்பட்ட உலகத்தைப் பாதுகாத்துக் கொள்கிறீர்கள், என்றார். சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பது குறித்து துருவ் விக்ரம் இன்ஸ்டாகிராமில் மிகவும் குறைவாகவே பதிவுகளை வெளியிடுவது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. நகைச்சுவை கலந்த விதத்தில், தன்னிடம் தனிப்பட்ட (Private) இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்கிறதா இல்லையா என்பதை ரசிகர்களால் “ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது” என்று கூறினார். மேலும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக தான் எந்தவொரு திட்டமிட்ட முடிவையும் எடுத்ததில்லை என்றும் அவர் விளக்கினார். “எனக்கு வீடியோக்களை எடிட் செய்வதும், காட்சிகளைப் படமாக்குவதும் மிகவும் பிடிக்கும். என் அப்பா, என் அண்ணன்/தங்கை குழந்தை மற்றும் என் செல்லப்பிராணிகளைப் படமாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நிறைய வீடியோக்களை எடிட் செய்கிறேன்; ஆனால் அவற்றை பதிவிடுவதில்லை. இசைக்கு ஏற்ப வீடியோக்களை வெட்டி எடிட் செய்ய ஐமூவி (iMovie)-ஐ பயன்படுத்த விரும்பியவன் நான். சமூக வலைதளங்களுடன் நாம் அனைவரும் ஒரு காலத்தில் நன்றாகப் பழகியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அது இப்போது ஒட்டுமொத்த உலகத்தின் மையப்பகுதி போல ஆகிவிட்டது. எனது படங்களுக்கான புரமோஷன் நேரங்களில் நான் சமூக வலைதளங்களில் அதிகம் செயல்படுகிறேன். மற்ற நேரங்களில், புத்தகங்கள் படிப்பது அல்லது இசையில் மூழ்கிவிடுகிறேன். இது நான் திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல,” என்றார். அனுபமா பரமேஸ்வரன் கூறியிருந்தது என்ன? மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த அனுபமா பரமேஸ்வரன், ஐயம் வித் தன்யா வர்மா (‘I AM With Dhanya Varma’) நிகழ்ச்சியில் தனது கடந்தகால உறவு குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அந்த உறவு தன்னை உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் எந்த அளவுக்கு பாதித்தது என்பதை அவர் விவரித்திருந்தார். முதலில் அளவுக்கு அதிகமான அன்பையும் கவனத்தையும் வெளிப்படுத்தி, பின்னர் கொடூரமாக நடந்துகொள்ளும் ஒரு சுழற்சி தனது கடந்தகால உறவில் இருந்ததாக அவர் கூறினார். மேலும், தனது முன்னாள் துணையின் நடத்தையை ‘அந்நியன்’ திரைப்படத்தின் கதாபாத்திரத்தைப் போன்ற மாறுபட்ட ஆளுமையுடன் ஒப்பிட்டார். அந்த இரண்டு ஆண்டுகளில் தான் கணிசமான அளவு உடல் எடையை இழந்ததாகவும் அனுபமா தெரிவித்திருந்தார். எனினும், அந்த உறவில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதேபோல், அனுபமா பரமேஸ்வரனுடன் தனக்கு உறவு இருந்ததாகவோ அல்லது இல்லை என்றோ துருவ் விக்ரமும் அவரது தரப்பினரும் இதுவரை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
என்னை பாதித்த பெரிய விஷயம், தனிப்பட்ட உலகத்தை பாதுகாப்பது அவசியம்: பொதுவெளியில் மனம் திறந்த துருவ் விக்ரம்
PulseNews சுருக்கம்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் நாசீசிஸ்டிக் துன்புறுத்தலைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த நேர்காணலில் எந்தப் பெயரையோ அல்லது உறவையோ அவர் வெளிப்படையாகக் கூறாத நிலையில், அந்த விவகாரத்துடன் நடிகர் துருவ் விக்ரமின் பெயர் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது தனிப்பட்ட உலகத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று என நடிகர் துருவ் விக்ரம் பொதுவெளியில் மனம் திறந்துள்ளார். இதுவே தன்னை அதிகம் பாதித்த ஒரு விஷயம் என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema