நீ இப்போ சின்ன பையன்! உன் கல்யாணத்துக்கு இன்னும் வயசு இருக்கு! பெற்றோர் சொன்ன ஒரே வார்த்தை... விபரீத முடிவெடுத்த 16 வயது மாணவன்! நெஞ்சை பதறவைக்கும் சோகம்...!!!
விஜயநகரம் மாவட்டம் ஸ்ரீகவரப்புக்கோட்டை மண்டலம் சீதிபாளலம் கிராமத்தில் 16 வயது சிறுவன் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாக மணிகண்டா என்ற அந்த சிறுவன், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்டர்மீடியட் தொழிற்கல்வி படித்து வந்தார். காதல் விவகாரத்தில் திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் வலியுறுத்தல் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணிகண்டா காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். ஆனால், அவரது வயதை கருத்தில் கொண்ட பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையும் படிங்க: மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. கண்ணீரில் குடும்பத்தினர்.! “நீ இன்னும் சிறுவன்; திருமணம் செய்ய இன்னும் நிறைய காலம் இருக்கிறது” என்று கூறி பெற்றோர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மணிகண்டா மனமுடைந்த நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் தனியாக இருந்தபோது விபரீத முடிவு இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பியவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காதல் விவகாரத்தில் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், சிறுவன் உயிரை மாய்த்துக்கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவர்களின் காதல் விவகாரம் தொடர்பாக பெற்றோர் அவர்களுடன் அமைதியாக பேசி, அவசர முடிவுகளைத் தவிர்க்கும் வகையில் கவனமாக வழிகாட்ட வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. இதையும் படிங்க: நள்ளிரவில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிகொண்டிருந்த 4 வயது சிறுமி மாயம்! சிசிடிவி- யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி...!!!

விஜயநகரம் மாவட்டம் சீதிபாளலம் கிராமத்தில் 16 வயது மாணவரான நாக மணிகண்டா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயின்று வந்த அவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
தன்னுடைய காதலியை திருமணம் செய்து வைக்குமாறு மாணவர் தனது பெற்றோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர் இன்னும் சிறுவன் என்றும் திருமண வயதை அடையவில்லை என்றும் கூறி பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த மனக்கசப்பால் மாணவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.