PulseNews
சினிமா

Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று

<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். </p> <p>நேற்றைய எபிசோடில், ரேவதிக்காக கார்த்திக் வளைகாப்பு விழா நடத்துவதை பார்த்த சாமுண்டீஸ்வரி கடும் கோபமடைந்த நிலையில், இன்றைய எபிசோடில் பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறவுள்ளன.</p> <h2><strong>சாமுண்டீஸ்வரிக்கு பதிலடி தரும் மயில்வாகனம்:</strong></h2> <p>ரோகிணி தனது விருப்பத்தினால்தான் கார்த்திக் வீட்டிற்கு சென்றதாக கூறி சாமுண்டீஸ்வரியை எதிர்த்து பேசுகிறாள். இதனால் ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி மேலும் கோபமடைகிறாள்.</p> <p>அதனைத் தொடர்ந்து, ரோகிணி மற்றும் மயில்வாகனம் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது, “என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவள் ஆசைப்படுவதை நிறைவேற்றுவது ஒரு கணவனின் கடமை. அதனால்தான் அவளை கார்த்திக் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்” என்று மயில்வாகனம் சாமுண்டீஸ்வரியிடம் தைரியமாக பதிலடி கொடுக்கிறார்.</p> <h2><strong>உறுதி தரும் கார்த்திக்:</strong></h2> <p>மறுபுறம், தனக்காக விருப்பப்பட்டபடி வளைகாப்பு நடத்தி வைத்ததற்காக ரேவதி மிகவும் மகிழ்ச்சி அடைந்து கார்த்திக்கிற்கு நன்றி தெரிவிக்கிறாள். மேலும், தங்களுக்கும் விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்துகிறாள். இதைக் கேட்ட பரமேஸ்வரி பாட்டி, கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் எல்லாம் நல்லபடியாக நடைபெறும் என்று வாழ்த்துகிறார்.</p> <p>பின்னர், கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசும்போது, நான்கு எல்லைகளிலும் கருப்பசாமி விளக்கு ஏற்றுவதற்கு ராஜராஜன் வர வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கு கார்த்திக், “மாமாவை நானே அழைத்து வருகிறேன்” என்று உறுதியளிக்கிறான்.</p> <h2><strong>சாமுண்டீஸ்வரி பிடிவாதம்:</strong></h2> <p>ஆனால் இந்த தகவல் சந்திரகலா மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே கார்த்திக் மீது கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி, “எக்காரணம் கொண்டும் ராஜராஜனை அங்கு அனுப்ப மாட்டேன்” என்று உறுதியான முடிவை எடுக்கிறாள்.</p> <p>இதனால் கார்த்திக் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? சாமுண்டீஸ்வரியின் முடிவு அடுத்ததாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தவறவிடாமல் காணுங்கள்.</p>

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
PulseNews சுருக்கம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். ரேவதிக்காக கார்த்திக் வளைகாப்பு விழா நடத்தியதைக் கண்டு சாமுண்டீஸ்வரி கடும் கோபத்தில் இருக்கிறார்.

இன்றைய பகுதியில், ரோகிணி தனது விருப்பத்தின் பேரிலேயே கார்த்திக் வீட்டிற்குச் சென்றதாகக் கூறி சாமுண்டீஸ்வரியை மயில்வாகனம் எதிர்க்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேற உள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema