கடைசி நேரத்தில் காணாமல் போன பாஸ்போர்ட், கார்த்தி- ரேவதி சந்திப்பு நடக்குமா? கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எப்படியாவது ஏர்போர்ட்டை அடைய வேண்டும் என்ற பதற்றத்துடன் வேகமாக சென்றுகொண்டிருந்தார். அந்த பரபரப்பு இன்று இன்னும் அதிகரிக்கிறது. கார்த்திக்கின் பயணத்தை தடுக்க எதிரிகள் தீட்டும் திட்டங்களும், ரேவதியை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவமும் கதையை விறுவிறுப்பாக்குகின்றன. இன்றைய எபிசோடில், ரேவதி ஏர்போர்ட்டுக்குள் செல்லும்போது எதிரே வந்த ஒருவரின் ட்ராலி மீது எதிர்பாராத விதமாக மோதுகிறார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட, அங்கிருந்தவர்கள் உடனடியாக முதலுதவி அளிக்கின்றனர். அப்போது சிலர், பயணத்திற்கு கிளம்பும் நேரத்தில் இப்படி நடப்பது அபசகுனம் என்று பேச, அதை கேட்டு கோபமடைந்த சாமுண்டீஸ்வரி, "உங்க வேலையை மட்டும் பாருங்க!" என்று கடுமையாக பதிலடி கொடுக்கிறார். மறுபக்கம், கார்த்திக் ஏர்போர்ட்டை அடைவதை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு ரகசிய தகவல் தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்கள் பல்வேறு தடைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அனைத்தையும் தாண்டி கார்த்திக் ஏர்போர்ட்டை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பது எதிரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், விமானம் புறப்பட உள்ளதாக அறிவிப்பு ஒலிக்க, ரேவதி உள்ளே செல்ல தயாராகிறார். ஆனால் அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது பாஸ்போர்ட் கைவசம் இல்லை என்பது தெரியவர, பதற்றத்தில் பாஸ்போர்ட் மாயமாகிவிட்டதாக கூறுகிறார். இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த நொடியில் சந்திரகலாவுக்கு ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ரேவதியின் பர்ஸை எடுத்தபோது பாஸ்போர்ட் கீழே விழுந்ததை நினைவுபடுத்திக் கொண்ட அவர், அதை தேடி எடுத்து வருவதாக கூறி அவசரமாக காரை நோக்கி ஓடுகிறார்.கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்குமா? கார்த்திக் சரியான நேரத்தில் ஏர்போர்ட்டை அடைவாரா? அல்லது அவருக்கு எதிராக நடக்கும் சதி வெற்றி பெறுமா? என்ற பல பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கார்த்திகை தீபம் சீரியலில், விமான நிலையத்திற்குச் செல்லும் ரேவதி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி காயமடைகிறார். இதைப் பார்த்து சிலர் அபசகுனம் என்று பேச, சாமுண்டீஸ்வரி அவர்களைக் கடுமையாகக் கண்டிக்கும் சூழலில், கார்த்திக்கின் பயணத்தைத் தடுக்க எதிரிகள் பல்வேறு தடைகளை உருவாக்குகின்றனர்.
விமானம் புறப்படத் தயாராகும் வேளையில், தன்னிடம் பாஸ்போர்ட் இல்லாததை உணர்ந்து ரேவதி பதறுகிறார். இதையறிந்த சந்திரகலா, பாஸ்போர்ட் விழுந்த இடத்திற்கு விரைந்து செல்கிறார். கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்குமா, கார்த்திக் சரியான நேரத்தில் வந்து சேருவாரா என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகிறது.