PulseNews
சினிமா

2 ஆண்டுகள் அனுபவித்த வேதனை, என்னையே இழந்துவிட்டேன்: அமைதியை தேடிய பயணம் குறித்து மனம் திறந்த அனுபமா

தமிழில் கொடி, பைசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இறுதியில் அமைதியை அடைய, முடிவற்ற பாதைகளை விட்டுவிட வேண்டும்” என்று குறிப்பிட்டு, தனது காதல் உறவு முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற சுட்டிக்காட்டை அளித்திருந்தார். தற்போது, ஐ யம் வித் தனியா வர்மா (I AM with Dhanya Varma) நிகழ்ச்சிக்கு அளித்த புதிய பேட்டியில், அந்த பதிவுக்குப் பின்னால் இருந்த காரணங்கள், கடந்த சில மாதங்களில் நடந்த சம்பவங்கள் மற்றும் தற்போது தனது மனநிலை குறித்து அவர் விரிவாக பேசியுள்ளார். தான் வெளியிட்ட பதிவுகளுக்கு வந்த கருத்துக்கள் குறித்து பேசிய அனுபமா, இரண்டு வகையான மக்கள் இருந்தனர். ஒருபுறம், ‘அவர் குணமடைந்து வருகிறார்’ என்று கூறியவர்கள் இருந்தனர். அது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். நான் வாழ்க்கையில் அமைதியைத் தேடி, மீண்டு வருகிறேன். மற்றொரு புறம், சிலர் அடிப்படையற்ற கருத்துகளையும் பகிர்ந்தனர். அந்த பதிவு ஒரே இரவில் உருவானது அல்ல. அதன் பின்னால் நிறைய விஷயங்கள் இருந்தன. அந்த ஒரு பதிவின் பின்னால் இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்த உடல் மற்றும் மன வேதனைகள் இருந்தன. சும்மா ஒரு புகைப்படத்தை பகிர விரும்பவில்லை. நான் உண்மையாக குணமடைந்த பிறகே ஏதாவது பகிர வேண்டும் என்று நினைத்தேன். ஒரு பெண் தனது வாழ்க்கை குறித்து மிகப் பெரிய உண்மையை உணர்ந்து, குணமடைய நேரம் எடுத்துக் கொண்டு, மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை வெளிப்படுத்திய பயணம் தான் அது,” என்று அனுபமா கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நான் இரண்டு ஆண்டுகளாக ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ (Narcissistic Abuse) எனப்படும் மன உளவியல் துன்புறுத்தலை அனுபவித்தேன். இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி நான் சில வகையான மக்களை நினைக்கிறேன். முதலில், என்னைப் போன்றவர்கள். நடிகை மடோனா செபாஸ்டியன் இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி பேசிய ஒரு வீடியோவை முதன்முறையாக பார்த்தபோது, நான் உடல் ரீதியாக நடுங்கத் தொடங்கினேன். Anupama opens up about Love and Reason Begind Breakup...😮 pic.twitter.com/pO201ezymo — Christopher Kanagaraj (@Chrissuccess) August 12, 2026 முதல் வகை மக்கள், இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தவர்கள் அல்லது அதை அருகில் இருந்து பார்த்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். இரண்டாவது வகை, இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் அறியாதவர்கள். மூன்றாவது வகை, பாலின அடிப்படையில் கருத்துக்களை உருவாக்கி எதிர்மறை கருத்துகளை பதிவிடுபவர்கள். இதில் நான் பேச விரும்பும் முக்கியமானவர்கள், இதே அனுபவத்தை சந்தித்தும் அதை இன்னும் அடையாளம் காணாதவர்கள். அதுதான் மிகவும் ஆபத்தான நிலை,” என்றார். அனுபமா தனது உறவில் இருந்த நபரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், “அந்த உறவு தொடங்கிய பிறகு, நான் என்னையே இழக்கத் தொடங்கினேன். என் உடல் எடை குறைந்தது. மலர வேண்டிய நான், மெல்ல சுருங்கிக் கொண்டே போனேன்,” என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் அனுபமா, இயற்கையை ரசித்தும், கடற்கரையில் நேரம் செலவிட்டும் இருக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதன் பதிவில், சில நேரங்களில், உங்கள் அமைதியை அடைய முடிவற்ற பாதைகளை விட்டுவிட வேண்டும். இன்று, அமைதி என்னை வந்து சேர்ந்தது. இனிமேல் நான் என் குரலை தேர்வு செய்கிறேன். என் வாழ்க்கையை தேர்வு செய்கிறேன். இனி அனுமதி கேட்பதும் இல்லை. பயமும் இல்லை. என்னை நான் மீண்டும் கண்டுபிடிக்கும் பயணம் இது. நான் மறந்துவிட்ட வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். நீண்ட நாட்களாக சொல்ல நினைத்த ஒரு விஷயம் இருக்கிறது. மிகவும் நீண்ட காலமாக சொல்ல அனுமதிக்கப்படாத ஒரு விஷயம். நான் உங்களை எல்லோரையும் நேசிக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்ததற்கும், என்னை நம்பியதற்கும், என் வாழ்க்கையை அன்பால் நிரப்பியதற்கும் நன்றி. நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு அன்பும் எனக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் என்னை வந்து சேர்ந்தது. என்னை மீண்டும் எனக்கே திரும்ப வழிநடத்திய பிரபஞ்சத்துக்கு நன்றி. இது குணமடைவதற்கான பயணம். இது சுதந்திரத்திற்கான பயணம். என்னை நான் தேர்வு செய்யும் வாழ்க்கை. இறுதியாக, முழுமையாக, எந்த வருத்தமும் இன்றி, இது என் சொந்த வாழ்க்கை,” என்றும் அவர் எழுதியிருந்தார். View this post on Instagram A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காலமாடன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் துருவ் விக்ரம் காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. இருவரும் முத்தமிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதும், அவர்கள் பகிர்ந்ததாகக் கூறப்பட்ட ஸ்பாட்டிஃபை பிளேலிஸ்டின் காட்சிப் படமாக அது இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு சென்னை விருது வழங்கும் விழாவில், மேடையில் துருவ் விக்ரம் பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது அனுபமா வெட்கப்பட்டார். மேலும், அவரை தனது “அதிகாலை 2 மணிக்கு கால்” என்று குறிப்பிட்டார். மும்பையில் நடந்த மற்றொரு விருது விழாவில் துருவ் பகிர்ந்த நெருக்கமான செல்ஃபியையும் அனுபமா இதயச் சின்னத்துடன் மீண்டும் பகிர்ந்திருந்தார். ஆனால் பின்னர், இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பொதுவெளியில் பேசாமல் இருந்ததால், அவர்கள் உறவை தனிப்பட்டதாக வைத்திருக்கிறார்களா அல்லது பிரிந்துவிட்டார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
2 ஆண்டுகள் அனுபவித்த வேதனை, என்னையே இழந்துவிட்டேன்: அமைதியை தேடிய பயணம் குறித்து மனம் திறந்த அனுபமா
PulseNews சுருக்கம்

கொடி, பைசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்த கால உணர்வுகள் குறித்து மனம் திறந்துள்ளார். கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமைதியைத் தேடி சில பாதைகளைத் துறக்க வேண்டியது அவசியம் என்று அவர் பதிவிட்டிருந்தார், இது அவரது காதல் உறவு முறிந்திருக்கலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியது.

தற்போது 'ஐ யம் வித் தனியா வர்மா' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபமா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அனுபவித்த வேதனைகள் மற்றும் தன்னை இழந்தது போன்ற உணர்வுகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அந்தப் பதிவை வெளியிட்டதற்கான காரணங்கள் மற்றும் சமீபத்திய மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அவர் தனது நேர்காணலில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema