PulseNews
சினிமா

அதிக நேரம் போன் பார்த்ததால், ரூ3 லட்சம் செலவு; ஆப்ரேஷன் செய்த காரணம் என்ன? நடிகை ஷகீலா ஷாக் தகவல்

நடிகை ஷகிலா, பல ஆண்டுகளாக மொபைல் மற்றும் பிளேஸ்டேஷனில் தொடர்ந்து 4 முதல் 5 மணி நேரம் கேம்ஸ் விளையாடியதுடன், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் நீண்ட நேரம் வீடியோக்களைப் பார்த்து வந்ததால், கழுத்துத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ‘மைல்ஸ்டோன் மேக்கர்ஸ்’ (Milestone Makers) என்ற நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், இந்தப் பழக்கங்களே தனது கழுத்தில் ஏற்பட்ட டிஸ்க் பிரச்சினைக்கு நேரடிக் காரணமாக அமைந்ததாகவும், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நடிகை ஷகிலா கூறினார். நான் மொபைல் மற்றும் பிளேஸ்டேஷனில் 4 முதல் 5 மணி நேரம் கேம்ஸ் விளையாடுவேன். அதேபோல், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருப்பேன். கேம்ஸ் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அனுபவத்தை நான் ரசித்தேன். ஆனால், நீண்ட நேரம் ஒரே நிலையில், குறிப்பாக படுக்கையில் ஒருபுறமாகப் படுத்துக் கொண்டு இருந்தது, காலப்போக்கில் எனது கழுத்துத் தண்டுவடத்தைப் பாதித்தது. வலி அதிகமானபோது மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, அறுவை சிகிச்சைதான் இதற்கான ஒரே தீர்வு என்று பரிந்துரைத்தனர். அறுவை சிகிச்சை இல்லாமல் இந்தப் பிரச்சினை குணமாகாது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, அதற்கு சம்மதித்தேன். அறுவை சிகிச்சையின்போது, இரண்டு எலும்புகளுக்கு இடையில் டைட்டானியம் சிப் ஒன்றை பொருத்தி, பாதிக்கப்பட்ட பகுதியை நிலைப்படுத்தும் வகையில் திருகுகள் மூலம் அதை பொருத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாக ஷகிலா தெரிவித்துள்ளார். இரண்டு எலும்புகளுக்கு இடையில் இருந்த ஒரு பகுதி வெளியே வந்துவிட்டது. அதற்காக தற்போது டைட்டானியம் சிப்பை வைத்து, திருகுகள் மூலம் அதை பொருத்தியுள்ளனர். உண்மையாகச் சொன்னால், இது தேவையில்லாத செலவு. பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; இதனுடன் ஏற்பட்ட வலியும் வேதனையும் மிகவும் அதிகம்” என்று அவர் கூறினார். மேலும், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஷகிலா, குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்போனில் செலவிடும் நேரத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்தியாவசியமான விஷயங்களுக்கு மட்டுமே செல்போனைப் பயன்படுத்துங்கள். தேவையில்லாத வீடியோக்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். என்னுடைய வீடியோக்களாக இருந்தாலும் தேவையில்லாதவற்றைப் பார்க்க வேண்டாம். பயனுள்ள வீடியோக்களை மட்டுமே பாருங்கள். இல்லையென்றால் ரூ.3 லட்சத்தை இழப்பதுடன், தாங்க முடியாத வலியையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று அவர் எச்சரித்தார். யார் இந்த ஷகிலா? ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் அருகே பிறந்த ஷகிலா சி. பேகம், ஆரம்பத்தில் மென்மையான வயது வந்தோருக்கான திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். சில படங்களில் பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பிரசாத் இயக்கிய ‘கின்னர தும்பிகள்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வெறும் ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் படம் சுமார் ரூ.4 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி ஷகிலாவை கேரளாவின் பாப் கலாச்சாரத்தில் முக்கியமான அடையாளமாக மாற்றியது. இதன் மூலம் ‘ஷகிலா தரங்கம்’ (Shakeela Tharangam) என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய அலை உருவானது. அடுத்த சில ஆண்டுகளில் திரையுலகில் ஷகிலா தனக்கென ஒரு பெரிய இடத்தைப் பிடித்தார். அந்தக் காலகட்டத்தில் தரமான படைப்புகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால், பல முன்னணி ஆண் நடிகர்களின் படங்களைவிட ஷகிலா நடித்த திரைப்படங்கள் கூட பெரிய வெற்றியைப் பெற்றன. எனினும், ‘ஷகிலா தரங்கம்’ நீண்ட காலம் நீடிக்கவில்லை.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அதிக நேரம் போன் பார்த்ததால், ரூ3 லட்சம் செலவு; ஆப்ரேஷன் செய்த காரணம் என்ன? நடிகை ஷகீலா ஷாக் தகவல்
PulseNews சுருக்கம்

நீண்ட நேரம் கைபேசி மற்றும் பிளேஸ்டேஷனில் கேம் விளையாடியதாலும், சமூக வலைதளங்களில் அதிக நேரம் வீடியோக்களைப் பார்த்ததாலும் நடிகை ஷகிலாவுக்கு கழுத்துத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் ரூ.3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

‘மைல்ஸ்டோன் மேக்கர்ஸ்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து 4 முதல் 5 மணி நேரம் திரையைப் பார்த்து வந்ததே இந்த டிஸ்க் பிரச்சினைக்குக் காரணம் என்று கூறியுள்ளார். இந்தப் பழக்கத்தால் இறுதியில் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema