PulseNews
சினிமா

கிசுகிசுகளுக்கு இடையில் திரிஷா கொடுத்த மறைமுக பதிலடி! இந்த மெசேஜ் யாருக்கு? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகை திரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இரண்டு பதிவுகள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தன்னைச் சுற்றி பரவும் பேச்சுகளுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் அவை இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘தேவையில்லாமல் டிராமா செய்வது அசிங்கம்’ திரிஷா தனது பாட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். “இந்த வயதில் தேவையில்லாமல் டிராமா செய்வது அசிங்கமானது; சென்று நாலு காசு சம்பாதித்து மன நிம்மதியைத் தேடுங்கள்” என்ற பொருளில் அந்தப் பதிவு அமைந்திருந்தது. இதையும் படிங்க: முடிவுக்கு வந்த பிரச்சனை.... ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு வார்த்தை! குஷியில் துள்ளும் தளபதி ரசிகர்கள்...!!! சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி அளித்த பேட்டி தொடர்பாகவும் இணையத்தில் விவாதம் எழுந்திருந்தது. அதில் விஜய்-திரிஷா காதல் மற்றும் சங்கீதாவுடனான விஜய்யின் திருமணம் குறித்து கூறப்பட்ட தகவல்கள் காலவரிசை தொடர்பான விமர்சனங்களை சந்தித்தன. ‘கில்லி’ படத்திற்கு முன்பே விஜய்க்கு திருமணம் நடந்துவிட்டது என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வந்தனர். இந்தச் சூழலில் திரிஷாவின் பதிவு வெளியாகியிருப்பதால், அது குட்டி பத்மினியின் கருத்துகளுக்கு கொடுக்கப்பட்ட மறைமுக பதிலடி யாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அந்தப் பதிவு யாரை குறிப்பிட்டு வெளியிடப்பட்டது என்பது குறித்து திரிஷா நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை. ‘நாம் பிரார்த்தனை செய்த வாழ்க்கை கிடைப்பது பாக்கியம்’ இதற்கிடையே திரிஷா பகிர்ந்த மற்றொரு ஸ்டோரியும் கவனம் பெற்றுள்ளது. “ஒரு காலத்தில் நாம் எதற்காகப் பிரார்த்தனை செய்தோமோ, அதே வாழ்க்கை இப்போது கிடைத்து அதில் மகிழ்ச்சியாக இருப்பது மிகப்பெரிய பாக்கியம்” என்ற கருத்தை அவர் பதிவிட்டுள்ளார். தன்னைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் பேசப்பட்டு வரும் நிலையில், திரிஷா இவ்வாறு பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது இரண்டு பதிவுகளும் ஒரே நேரத்தில் கவனம் பெற்றுள்ளதால், அவை விஜய்-திரிஷா விவகாரம் தொடர்பான பேச்சுகளுக்கு பதிலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், தனது பதிவுகளின் பின்னணி குறித்து திரிஷா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், சமூக வலைதளங்களில் அவருடைய பதிவுகளுக்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திரிஷாவின் அடுத்த பதிவுகள் மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதையும் படிங்க: முகத்துல என்ன ஒரு சந்தோஷம்... ஜனநாயகன் படம் பார்க்க செம ஸ்டைலாக ஓடோடி வந்த திரிஷா! வைரலாகும் வீடியோ....!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கிசுகிசுகளுக்கு இடையில் திரிஷா கொடுத்த மறைமுக பதிலடி! இந்த மெசேஜ் யாருக்கு? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
PulseNews சுருக்கம்

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தன்னைச் சுற்றி பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த பதிவுகள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடிய திரிஷா, 'தேவையில்லாமல் டிராமா செய்வது அசிங்கம்' என்று ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த மறைமுகப் பதில் யாருக்காக என்பது குறித்த எதிர்பார்ப்பு நெட்டிசன்களிடையே அதிகரித்துள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema