PulseNews
சினிமா

விவகரத்து மனுவை திரும்ப பெற்ற சங்கீதா, 'இந்த வயதில் நாடகமா?'; த்ரிஷா வெளியிட்ட மர்ம பதிவால் மீண்டும் பரபரப்பு

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மர்மமான பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: விஜய் - சங்கீதா இடையேயான திருமண விவகாரம் தொடர்பான யூகங்களின் மையத்தில் த்ரிஷாவின் பெயர் இடம்பெற்று வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவுகளின் நேரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும், தங்களைப் பற்றிய இந்தக் கருத்துகள் மற்றும் வதந்திகள் குறித்து த்ரிஷாவோ, விஜய்யோ இதுவரை வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்த ஒரு பதிவில், “இந்த வயதில் நாடகம் போடுவது சங்கடமாக இருக்கிறது... போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து, நிம்மதியாக இருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதனுடன் ஒரு எமோஜியையும் அவர் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்தப் பதிவு யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை த்ரிஷா ‘தீய கண்’ எமோஜியுடன் மறுபகிர்வு செய்திருந்தார். அதில், “ஒரு காலத்தில் நீங்கள் வேண்டிக்கொண்ட வாழ்க்கையால் இன்று முழுமையாக மூழ்கிப்போயிருப்பது எவ்வளவு பெரிய வரம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் - சங்கீதா திருமண வாழ்க்கை குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், த்ரிஷாவின் இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக கவனம் பெற்றன. பாட்டியின் 98-வது பிறந்தநாளைக் கொண்டாடிய த்ரிஷா இதற்கிடையில், த்ரிஷா தனது பாட்டியின் 98-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் அவரது தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். த்ரிஷாவின் செல்லப்பிராணியான இஸ்ஸியும் (Izzy) பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காணப்பட்டது. ஊதா நிற புடவை அணிந்திருந்த த்ரிஷாவின் பாட்டி, குடும்பத்தினருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தங்க நிற மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்ட பாதாம் கேக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய்க்கு எதிரான விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்ற சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விஜய்க்கு எதிராக சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அவர் திரும்பப் பெற்ற நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, சங்கீதா காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, விவாகரத்து மனுவைத் திரும்பப் பெறுவதற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்தார். சங்கீதாவின் மனுவைத் திரும்பப் பெறுவதற்கு விஜய்யின் வழக்கறிஞர் தரப்பு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெற சங்கீதாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிய மனுவுடன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது. எனினும், விவாகரத்து மனுவைத் திரும்பப் பெறுவதற்கான காரணம் என்ன என்பது நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. விவாகரத்து மனுவில் சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் என்ன? 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தனது திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரியிருந்தார். விஜய் - சங்கீதா தம்பதி கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது விவாகரத்து மனுவில், விஜய் பெண் நடிகை ஒருவருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் இருப்பதாக சங்கீதா குற்றம்சாட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவு தனக்கு “ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான வலியையும் மன வேதனையையும் ஏற்படுத்தியதாகவும், இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறிய செயலாகவும் இருந்தது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் ஆரம்பத்தில் அந்த உறவு முடிவுக்கு வரும் என்று தனக்கு உறுதியளித்ததாகவும், ஆனால் அதன்பிறகும் அந்தத் தொடர்பு தொடர்ந்ததாகவும் சங்கீதா தனது மனுவில் கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணர்வுப்பூர்வமான புறக்கணிப்பு, பொதுவெளியில் அவமானப்படுத்துதல், மனரீதியான கொடுமை மற்றும் தாம்பத்திய வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்தல் உள்ளிட்ட காரணங்களையும் விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக சங்கீதா குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் வசிப்பிட உரிமை உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களையும் சங்கீதா கோரியிருந்தார். மேலும், சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். எனினும், அந்த விவாகரத்து மனுவில் குற்றம்சாட்டப்பட்ட நடிகையின் பெயர் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், விஜய் - த்ரிஷா இடையேயான உறவு குறித்து நீண்டகாலமாக நிலவி வந்த ஊகங்களின் காரணமாக, சங்கீதாவின் குற்றச்சாட்டுகளுடன் த்ரிஷாவின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டது. விஜய் - த்ரிஷா உறவு குறித்து ஏன் கவனம் அதிகரித்தது? சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியான சில நாட்களிலேயே, சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாகக் காணப்பட்டனர். அதன்பின்னர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் விஜய்யின் வீட்டில் த்ரிஷா காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த நாள் த்ரிஷாவின் பிறந்தநாளாகவும் இருந்தது. மேலும், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற விழாவிலும் த்ரிஷா பங்கேற்றிருந்தார். இதனால், இருவருக்கும் இடையேயான உறவு குறித்த ஊகங்கள் மேலும் அதிகரித்தன. View this post on Instagram A post shared by Trish (@trishakrishnan) கடந்த ஜூன் மாதம் விஜய்யின் 52-வது பிறந்தநாளையொட்டி த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவித்தபோதும் இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றது. பிறந்தநாள் கொண்டாட்டம் போல் தெரிந்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த த்ரிஷா, “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் அந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் விஜய் பல கேக்குகளுக்கு அருகில் நிற்பது போலவும், த்ரிஷா அவரைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருந்தது. விஜய் - த்ரிஷா இணைந்து நடித்த படங்கள் விஜய்யும் த்ரிஷாவும் ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, குருவி, லியோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2023-ம் ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்தது, அவர்களது ஜோடி குறித்த ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரித்தது. அதன்பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தோன்றிய சம்பவங்கள் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதன் காரணமாக விஜய் - த்ரிஷா இடையேயான உறவு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களும் தொடர்ந்து பரவி வருகின்றன.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விவகரத்து மனுவை திரும்ப பெற்ற சங்கீதா, 'இந்த வயதில் நாடகமா?'; த்ரிஷா வெளியிட்ட மர்ம பதிவால் மீண்டும் பரபரப்பு
PulseNews சுருக்கம்

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், அவர் மீது தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்மமான பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் த்ரிஷாவின் பெயர் அடிபட்டு வரும் சூழலில், அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

விஜய் - சங்கீதா இடையிலான திருமண விவகாரம் குறித்த யூகங்களில் த்ரிஷாவின் பெயர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், த்ரிஷா பகிர்ந்துள்ள பதிவுகள் இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema