PulseNews
வணிகம்

பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

<p style="text-align: justify;"><strong>மயிலாடுதுறை:</strong> மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். தகுதியான மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்று பயன்பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p> <h3 style="text-align: justify;">பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்</h3> <p style="text-align: justify;">மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ‘பி.எம். யஷஸ்வி’ (PM YASASVI - Top Class Education in Schools for OBC, EBC & DNT Students) என்ற சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify;">இத்திட்டமானது திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் மேல்நிலைப்பள்ளி கல்வியை தடையின்றித் தொடர உதவும் வகையில் நிதி வழங்கி ஆதரவளித்து வருகிறது. 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள நூறு சதவீதம் தேர்ச்சி விகிதம் கொண்ட சிறந்த செயல்பாடுடைய கல்வி நிறுவனங்களில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.</p> <h3 style="text-align: justify;">வழங்கப்படும் உதவித்தொகை விபரம்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் ஆண்டொன்றுக்கு பெருந்தொகை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதன்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.1,25,000 வரையிலும் ஒன்றிய அரசால் நேரடியாக வழங்கப்படுகிறது. </p> <p style="text-align: justify;">மேலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், இத்திட்டத்தில் மொத்த ஒதுக்கீட்டில் 30 சதவீதம் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.</p> <h3 style="text-align: justify;">தகுதி மற்றும் நிபந்தனைகள்</h3> <p style="text-align: justify;">இக்கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு சில முக்கிய நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மாணவர்களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும், விண்ணப்பதாரர்கள் 2025-26-ஆம் கல்வியாண்டில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள சிறந்த பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் பயில்பவராக இருக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதிகள்</h3> <p style="text-align: justify;">கடந்த நிதியாண்டில் (2025-26) இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ-மாணவிகள், நடப்பாண்டில் (2026-27) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தொடர்ந்து பயிலும் பட்சத்தில், அவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) பிரிவின் கீழ் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்திற்குச் சென்று <a href="https://scholarships.gov.in">https://scholarships.gov.in </a>உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து வரும் 31.08.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இணையத்தில் மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து உறுதி செய்வதற்கான கடைசி நாள் 15.09.2026 ஆகும்.</p> <p style="text-align: justify;">நடப்பு கல்வியாண்டில் (2026-27) புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் முறைப்படி அறிவிக்கப்படும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் அல்லது மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை <a href="http://socialjustice.gov.in">http://socialjustice.gov.in </a>பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினைத் தவறவிடாமல் குறித்த காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p>

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
PulseNews சுருக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் ரூபாய் வரை பெற வாய்ப்புள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான மாணவ-மாணவிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வாய்ப்பை தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business