சொத்து வரி உயர்வு.. அரசு கஜானாவுக்கு வந்துள்ள ரூ.15,000 கோடி: டிடிவி தினகரன் சரமாரி கேள்வி
சென்னை மாநகராட்சியில் திடீரென சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனிடையில் மாமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் தவெக அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி திடீரென உயர்த்தப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இது குறித்து மேயர் பிரியா கருத்து தெரிவித்துள்ளார். மாமன்ற உறுப்பினர்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசு கஜானாவுக்கு ரூ.15,000 கோடி வந்துள்ள நிலையில், வரி உயர்வு குறித்து டிடிவி தினகரன் தமிழக அரசிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.