337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ... 88 ஆண்டுகள் நிறைவு: செயற்கை ஆறான புது ஆற்றின் பின்னணி
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய் ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்ட செயற்கை ஆறு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், இந்த ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும். ஆறுகளை இடைமறித்தே அணைகள் கட்டப்பட்டுள்ளன. சிறிய ஆறுகளில் தடுப்பணைகளும், கால்வாய்களும் உருவாக்கி பாசன நிலங்கள் வளப்படுத்தப்படுகின்றன. இது விவசாய வளர்ச்சிக்கும், மனிதரின் உணவுத் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.<br /> <br />தமிழகத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்தவைதான் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்கள். மழை பெய்தால் மட்டுமே இங்கு விவசாயம் நடக்கும். மழை பொய்த்தால் விவசாயம் நடக்காது. இப்பகுதிகள் வளம் பெற வேண்டியும், இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து சாகுபடிகள் நடக்க வேண்டும் என்பதற்காகவும் வெட்டப்பட்டதுதான் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய். இந்த புது ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்பவர் வடிவமைத்தார்.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/1c332f087d51a57faa2d7d293329b17a1786180407131733_original.jpg" /></p> <p style="text-align: justify;">கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ. நீளம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசால் வெட்டப்பட்டவை. இந்த ‘ஏ’ கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 28.08.1934-ல் இந்த புது ஆறு (கல்லணைக்கால்வாய்) திறக்கப்பட்டது. 88 வயது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.</p> <p style="text-align: justify;">கட்டிடக் கலையின் உன்னதம் தஞ்சை பெரிய கோயில் என்றால், பாசனப் பொறியியலின் உன்னதம் இந்த புது ஆறு என்றால் மிகையில்லை. இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்டது. ஒரு சொட்டு நீரும் அனுமதி இல்லாமல் இதில் கலக்க முடியாது என்பதும் இதன் பெருமை.</p> <p style="text-align: justify;">இந்த ஆற்றில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் எனப்படும் சுரங்கங்கள், மேலே சூப்பர் பேஸேஜஸ் எனப்படும் மேல்நிலை கால்வாய்களும், பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யுடக்ட் எனப்படும் கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் டிராப் எனப்படும் நீரொழுங்கிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/7a006e848c2527e79d7b1661dd6854231786180446887733_original.jpg" /></p> <p style="text-align: justify;">இந்த ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், இந்த ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும். கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் கால்வாய் இது என்கின்றனர் பொறியாளர்கள்.</p> <p style="text-align: justify;">தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும் என்பதே இதற்கு சாட்சி. மேலே பார்ப்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும் அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். செயற்கையாக உருவாக்கப்பட்டாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய்.</p> Source: Read Full Article

தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக முற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆறே புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய் ஆகும். கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆறு, 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி திறக்கப்பட்டு தற்போது 88 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சுமார் 149 கி.மீ நீளம் கொண்ட இந்த ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ என்பது இதன் பிரம்மாண்டத்திற்கு சான்றாகும்.
மேடான நிலப்பகுதிகளுக்குள்ளும் நீரை கொண்டு செல்லும் வகையில் பொறியியல் நுணுக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்த கால்வாயில், கழிவுநீர் கலக்காதவாறு சைபன்கள், சூப்பர் பேஸேஜஸ்கள் மற்றும் 505 நீரொழுங்கிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோயில் அருகே 30 அடி ஆழத்திலும், திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் பயணிக்கும் இந்த ஆறு, வானம் பார்த்த பூமிகளாக இருந்த சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி விவசாய வளர்ச்சியை உறுதி செய்கிறது.