ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்காததற்கு கண்டனம்..!
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கம் சார்பில் பரமத்தி வேலூரில் இன்று ஒரு நாள்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 22 நாட்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடுப்பணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் சுமார் 30ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை,வாழை, உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படாததைக் கண்டித்து, விவசாயிகளுக்கு ஆதரவாகப் பரமத்தி வேலூரில் வணிகர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 22 நாட்களாக எவ்வித முன்னறிவிப்புமின்றி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெற்றிலை மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.