மத்திய கிழக்கின் போர் எதிரொலி! எண்ணெய் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி காணும் உலக நாடுகள்
ஈராக்கின் மசகு எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின் எண்ணெய் அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார். அமெரிக்க - இஸ்ரேலிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மசகு எண்ணெய் போர் தீவிரமடைவதற்கு முன்ன...

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஈராக்கின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதம் சரிவடைந்துள்ளதாக அந்நாட்டு எண்ணெய் அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார். பக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழலால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.