ரேஷன் அட்டைதாரரகளுக்கு குட் நியூஸ்.. இனி பொருட்கள் வாங்க ஒரிஜினல் கார்டு தேவையில்லை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..
Ration Card Announcement: எந்த நியாய விலைக் கடையிலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதி குறித்து பொதுமக்கள் பலருக்கும் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சட்டப்பேரவை வாயிலாக அதனை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புவதாக அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த நியாய விலைக் கடையிலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற வசதி நடைமுறையில் உள்ளது. இந்த முக்கியத் தகவலைப் பல பொதுமக்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சட்டப்பேரவையின் வாயிலாக இத்தகவலை மீண்டும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு இனி அசல் அட்டை தேவையில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.