சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
<h2><strong>" நகரங்களில் வீடு வாங்குவது சவால் "</strong></h2> <p>அடுக்குமாடி வீடு வாங்க விருப்பம் இல்லை என்பதால் , எப்படியாவது நிலம் வாங்கி சொந்தமாக தனி வீடு கட்ட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் , சென்னை போன்ற நகரங்களில் நிலம் வாங்குவது என்பதே பெரிய சவாலாக அமைந்துள்ளது.</p> <p>ஊரக பகுதிகளில் , குறைந்த பட்சம் மூன்று முதல் ஐந்து சென்ட் வரை தான் குறைந்தபட்ச மனை அளவாக உள்ளது. ஆனால் , சென்னை போன்ற நகரங்களில் சென்ட் கணக்கில் மனை வாங்க முடியாது என்பதால் , சதுரடி அடிப்படையில் தான் மனை வாங்க முடியும். அதுவும் நகரின் பிரதான பகுதிகளை விடுத்து வெளியில் , மிக குறைந்த பரப்பளவு நிலம் கிடைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.</p> <p>குறிப்பாக , 500 அல்லது , 600 சதுரடி நிலம் கிடைத்தால் கூட போதும் என்ற அடிப்படையில் மக்கள் வீடு கட்ட முடிவு செய்கின்றனர். சொந்தமாக வீடு கட்ட நினைப்பவர்கள் , வீடு அதிக பரப்பளவில் விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் , குறைந்த பரப்பளவு நிலத்தில் என்ன முடியுமோ அதன்படி மட்டுமே வீடு கட்ட முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.</p> <h2><strong>வீடு கட்ட அனுமதி</strong></h2> <p>வீட்டுக்கான மனை வாங்கும் போது, கட்டடம் கட்ட அனுமதிக்கப்படும் குறைந்த பட்ச பரப்பளவு என்ன என்பதை புரிந்து அதற்கு ஏற்ற பரப்பளவில் மனை வாங்க வேண்டும். இதன்படி , 840 சதுர அடி அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மனை வாங்கினால், அதில் வீடு கட்ட அனுமதி கிடைக்கும். ஆனால் , குடும்பத்துக்குள் பங்கு பிரித்தல் போன்ற காரணங்களால், 500 அல்லது, 600 சதுரடி பரப்பளவு மனை பெற்றவர்கள் உரிய ஆதாரங்களை கொடுத்தால் அதில் கட்டட அனுமதி கிடைக்கும்.</p> <p>இவ்வாறு, 500, 600 சதுரடி அளவு மனையில் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வீடு கட்ட முடியுமா என்ற கேள்வி எழும். இது போன்ற குறைந்தபட்ச பரப்பளவு மனைகளில் வீடு கட்ட வேண்டும் என்றால், தரைதளம் மட்டுமல்லாது , முதல் தளத்துக்கும் சேர்த்து வரைபடம் தயாரித்தால் தான் சாதாரணமாக ஒரு குடும்பம் இயல்பான முறையில் வசிக்க முடியும்.</p> <p>இந்த வகையில் தரைதளத்தில் , வரவேற்பு அறை , சமையலறை , ஒரு படுக்கை அறை மட்டும் அமைக்கலாம். முதல் தளத்தில் ஒரு வரவேற்பு அறை , இரண்டு படுக்கை அறை , ஒவ்வொன்றிலும் அட்டாச்டு பாத்ரூம் போன்ற வசதிகளை ஏற்படுத்தலாம். இதன்படி திட்டமிட்டால், 500 சதுரடி நிலத்தில் மூன்று படுக்கை அறை வீட்டை எளிதாக கட்டலாம் என்று கூறப்படுகிறது.</p> <p>இதில் ஒவ்வொரு பாகத்தையும் மிக மிக துல்லியமாக கணக்கிட்டு வடிவமைத்தால் நெருக்கடி என்பதே தெரியாத அளவுக்கு உங்கள் புதிய வீடு அமையும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள். குறைந்த பரப்பளவு நிலத்தில், தரைதளம் முதல் தளம் என்ற அடிப்படையில் வடிவமைக்கும் போது, பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வீட்டை பெறலாம்.</p>

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளைத் தவிர்த்து, சொந்தமாகத் தனி வீடு கட்ட விரும்புபவர்களுக்கு நிலம் வாங்குவது பெரும் சவாலாக உள்ளது. ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து சென்ட் நிலம் தேவைப்படும் நிலையில், சென்னையில் சென்ட் கணக்கில் மனை வாங்குவது நடைமுறையில் சாத்தியமற்றதாக உள்ளது.
சென்னை போன்ற நகரங்களில் சதுர அடி அடிப்படையில் மட்டுமே மனை வாங்க முடியும் என்பதால், 500 சதுர அடியில் எப்படிச் சொந்த வீடு கட்டலாம் என்பது குறித்த ஆலோசனைகள் அவசியமாகின்றன. சொந்த வீடு என்பது பலரின் கனவாக இருந்தாலும், நகரத்தின் நிலப்பரப்புச் சூழலுக்கு ஏற்பத் திட்டமிடுவதே இக்கனவை நனவாக்க உதவும்.