PulseNews
வணிகம்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்..!

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். பட்டு வேட்டி, சட்டை அணிந்து சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் சென்ற முதலமைச்சர் விஜயை, அமைச்சர்கள் ஆனந்த், தமிழன் பார்த்திபன் ஆகியோர் வரவேற்றனர். கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து வேனில் மேட்டூர் நோக்கி சென்ற விஜயை, சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்றனர். மேச்சேரி தொடங்கி மேட்டூர் அணை வரை வேனில் நின்றபடி ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, மேட்டூர் அணைப் பகுதியில் காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைத்து, காவிரியை வணங்கி பூக்களையும் நெல்மணிகளையும் தூவி நீரை வரவேற்றார். அப்போது அவருக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் பச்சைத்துண்டு அணிவித்தனர். அணையில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 7000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்..!
PulseNews சுருக்கம்

சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்ற அவருக்கு, அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் தமிழன் பார்த்திபன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் நோக்கி வேனில் சென்ற முதலமைச்சருக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேச்சேரி முதல் மேட்டூர் அணை வரை வேனில் நின்றபடி அவர் பொதுமக்களைச் சந்தித்துச் சென்றார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business