தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் ஒரு டி.எம்.சி வழங்க வேண்டும் - காவிரி ஒழுங்காற்று குழு காவிரி ஆணையத்திற்கு பரிந்துரை
காவிரியில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் தமிழகத்திற்கு நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை பரிந்துரையின் படி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு பிறபிக்கப்படும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் 45 டிஎம்சி நீரை வழங்க தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு உரிய விகிதாச்சாரப்படி மொத்தம் 45 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இது குறித்த இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.