யாழிலிருந்து சட்டவிரோதமாக பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் காவல்துறையினரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அதன் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தச் சிறப்புச் சட்ட அமுலாக்க நடவடிக்கையை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.
இது குறித்த தகவலை குறித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாகப் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.