BREAKING: சற்று முன்... இந்த நாளன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது! தமிழக அரசு அறிவிப்பு!!!
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 26-ம் தேதி புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படுகின்றன. இதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறாது. ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் கடைகள் மூடல் மிலாடி நபி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை எந்தவித விலக்குமின்றி அனைத்து கடைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: BREAKING: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்.... சற்றுமுன் தமிழக அரசின் ஹேப்பி நியூஷ்!!! கள்ளச்சந்தை விற்பனைக்கு கடும் எச்சரிக்கை விடுமுறை நாளை பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதைத் தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கள்ளச்சந்தையிலோ அல்லது கூடுதல் விலைக்கோ மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8 முக்கிய நாட்களில் மட்டும் விடுமுறை டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட சில முக்கிய நாட்களில் மட்டுமே முழுமையான விடுமுறை வழங்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 8 முக்கிய நாட்கள் இதில் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில், தற்போது மிலாடி நபி பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 26-ம் தேதி TASMAC Holiday அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு முத்தமிட்டு ரீல்ஸ்.. ஆசிரியர் கண்டிப்பால் மாணவர் தற்கொலை.. உறவினர்கள் போர்க்கொடி.!

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 26-ம் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எந்தவித விலக்குமின்றி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.